வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

மாதங்களை எண்ணப் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone